Saturday, April 12, 2008

வணக்கமுங்கோ !!!!!!!!!!!


எல்லோருக்கும் வணக்கம். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டின்கிற மாதிரி நாங்க பாட்டுக்கு சிவனேன்னு அக்கா கடையிலேயும், பொங்கல் மெஸ்ஸிலயும் சாப்பிட்டுட்டுக்கிட்டு இருந்தோம். எவனுக்குத்தான் அந்த யோசனை தோணுச்சுன்னு தெரியலை, திடீர்னு நான் திருப்பதி போயிருந்த சமயமாப் பார்த்து வீட்டிலே கேஸ் அடுப்பு, பலசரக்குன்னு எல்லாம் வாங்கிப் போட்டு "இனிமே தினமும் வீட்டில் தான் சமையல்" என்று சொல்லிவிட்டார்கள்.

சரி. நாமும் சமையல் பழகிக் கொள்வோமே என்று ஆரம்பித்து இன்றோடு மூன்று மாதங்கள் ஆகிறது. பரவாயில்லை. கொஞ்சம் ருசியாகவே சமைப்பதாக அறை நண்பர்களும், பக்கத்து வீட்டு நண்பர்களும் கூறுகின்றனர்.

எனவே நண்பர்களே நான் சமைத்தது, சமையல் செய்யும் போது சூடு பட்டது, நான் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு சிலர் மயங்கி விழுந்ததுன்னு எல்லாவற்றைப் பற்றியும் எழுதப்போகிறேன். வந்து கை நனைச்சுட்டுப் போங்க. :)